கங்கா யமுனா சரஸ்வதி - 54
விஸ்வநாதன்
காலையிலேயே நான் போய் பாஸ் ஸ்டாப்பில் காத்துக் கொண்டிருந்தேன்..
சரியான நேரத்தில் கும்பகோணத்தில் இருந்து பஸ் வந்து நின்றது..
சரஸ்வதி பெட்டியும் படுக்கையுமாக வந்து இறங்கினாள்..
என்ன சரஸ்வதி பிரயாணம் எல்லாம் எப்படி இருந்தது என்று கேட்டேன்..
ரொம்ப சோர்வாக காணப்பட்டாள்..
வேலை எல்லாம் சூப்பர்ங்க.. ஒன்னும் கஷ்டம் இல்ல.. ஆனா இந்த பஸ்ல அவ்வளவு தூரம் போய் போய் வர்றது தான் எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு..
ம்ம்.. கவலைப்படாத.. அதுக்கு ஒரு நல்ல ஏற்பாடு செஞ்சி வச்சிருக்கேன்..
சரஸ்வதி பெட்டி படுக்கையை என்னிடம் கொடுக்க.. நான் பைக்கில் பின் பக்கம் வைத்து கட்டினேன்..
சரஸ்வதி என் பின்னால் ஏறி அமர்ந்தாள்..
என் தோள்களை பற்றிக் கொண்டு என்னை வழக்கமாக ஒட்டியே உட்கார்ந்தாள்..
நான் பைக்கை ஸ்டார்ட் செய்து வீட்டை நோக்கி ஓட விட்டேன்..
என்ன ஏற்பாடுங்க என்று என் தோள்களில் தன் அழகிய தாடைகளை பதித்தபடியே கேட்டாள்..
என் பிரென்டு கோபால் வாரத்துக்கு ஒரு முறை கும்பகோணம் போய் போய் வருவான்.. அவன்கிட்ட உன் காலேஜ் வேலை பற்றி சொன்னேன்.. அவனே உன்னை வெள்ளிக்கிழமை அங்க டிராப் பண்ணிட்டு அப்படியே திங்கள் கிழமை வரும் போது அவன் காரிலேயே பிக் அப் பண்ணிட்டு வந்துட்றேன்னு சொல்லிட்டான்..
அதனால இனிமே உனக்கு பஸ்ல டயர்டா போற வேலை இல்ல.. கோபால் கூட காரிலேயே போய் காரிலேயே திரும்பி வந்திடலாம்.. உனக்கு அலுப்பு தெரியாது.. என்ன சொல்ற.. என்று நான் திரும்பாமலேயே கவனமாக வண்டியை ஓட்டியபடி சொல்ல...
அப்பாடா.. இப்ப தாங்க நிம்மதியா இருக்கு.. ரொம்ப தேங்க்ஸ்ங்க.. என்று அவள் என்னிடம் சொல்ல..
நான் வண்டியை கவனமாக ஓட்டிக் கொண்டிருந்தேன்..
என்னங்க.. நம்ம வீட்டுக்கு போறதுக்கு முன்னால.. அப்படியே சிவகுமார் சார் வீட்டுக்கு போயிட்டு போலாங்க.. என்றாள்..
எதுக்கு சரஸ்வதி சிவகுமார் வீட்டுக்கு.. என்று நான் கேட்க..
ஒரு பென் டிரைவ் அவர்கிட்ட கொடுக்கணும்.. அதும் இல்லாம.. இந்த நடுல வர்ற ஞாயிற்று கிழமை நான் காலேஜ் லீவா இருந்தாலும் கும்பகோணத்துல வேஸ்ட்டா தங்க வேண்டியதா இருக்கு.. அதனால என்னோட டயம் டேபிள் மாத்தி கொடுக்க மறுபடியும் ஒரு ரிக்கமெண்டேஷன் லெட்டர் தர்றேன்னு சொன்னாரு அதனால முதல்ல அவரை பார்த்துத்து அப்புறம் வீட்டுக்கு போலாங்க.. என்று அவள் சொல்லவும்..
நான் வண்டியை சிவகுமார் வீட்டு பக்கம் திருப்பினேன்..
வாசலில் கூர்க்கா... எங்களை பார்த்ததும்.. சலாம் சாப்.. என்ன இந்த பக்கம் என்றான் அந்த நேப்பால்காரன்
சிவகுமா£ர் சாரை பார்ககணும் என்று சொல்ல..
சாப்.. சிவகுமார் சாப் வெளியே போய் இருக்கார்.. வர்ற இரண்டு மணி நேரம் ஆகும்.. என்றான்..
ஐயோ.. 2 மணி நேரம் ஆகுமா.. என கவலைப்பட்டாள் சரஸ்வதி..
சரி பரவாயில்ல.. ஒன்னு பண்ணுங்க.. இந்த பென் டிரைவை சிவகுமார் சார்கிட்ட குடுத்திடுங்க.. நான் மதியானத்துக்கு மேலே வந்து பார்க்குறேன்னு சொல்லுங்க என்று சரஸ்வதி அந்த கூர்க்கவிடம் பெண் டிரைவை கொடுத்து விட்டு மீண்டும் என் பைக்கில் வந்து ஏறிக் கொண்டாள்..
நான் பைக்கை மீண்டும் எங்கள் வீட்டின் திசை நோக்கி செலுத்தினேன்..
வீடு வந்து சேர்ந்தோம்..
வாசலிலேயே என் மகன் நின்று கொண்டிருந்தான்..
அம்மா.. என்று ஓடி வந்து சரஸ்வதியை இறுக்கமாக கட்டி அணைத்து அவள் கன்னம் இரண்டிலும் மாற்றி மாற்றி முத்தம் கொடுத்தான்..
சரஸ்வதியும் மகனை இந்த 4 நாட்கள் பிரிந்த ஏக்கத்தில் அவனை இறுக்கி கட்டி அணைத்து இச் இச் என்று அவன் கன்னத்திலும் நெற்றியிலும் மாற்றி மாற்றி முத்தம் கொடுத்தாள்..
அம்மா மகன் இருவரும் இதுவரை இப்படி இத்தனை நாட்கள் பிரிந்தது இல்லை..
என் மகன் ரொம்ப ஏங்கி போய் இருந்தான்..
அப்படியே சரஸ்வதியும் என் மகனும் கட்டி அணைத்தபடி வீட்டிற்குள் சென்றார்கள்..
நான் சரஸ்வதி கொண்டு வந்திருந்த பெட்டி படுக்கை எல்லாம் எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தேன்..
என்னங்க.. எனக்கு செம டயர்டா இருக்கு.. நான் கொஞ்சம் படுத்து தூங்குறேன்.. சரியா 2 மணி நேரத்துக்கு பிறகு எழுப்பி விடுங்க.. சிவகுமார் சார் வீட்டுக்கு போகணும்.. என்றாள்..
சரி நீ நம்ம பையன் ரூமிலேயே போய் படுத்துக்க.. எனக்கு வெளியே வேலை இருக்கு.. நான் போய்ட்டு சரியா இரண்டு மணி நேரத்துல வந்துடுறேன்.. என்று சொல்லிவிட்டு நான் வெளியே சென்றேன்..
என் வேலைகளையும் எல்லாம் முடித்து வீடு திரும்பிய போது.. சரஸ்வதி நன்றாக குளித்து பிரெஷ்ஷாக வேறு புடவையில் அருமையாக கவர்ச்சியாக ரெடியாகி இருந்தாள்..
போலாமாங்க என்று கேட்க.. எனக்கு இப்ப டயர்டா இருக்கு.. நீ ஆட்டோ பிடிச்சி சிவகுமார் வீட்டுக்கு போயிட்டு வந்துட்றியா என்று நான் கேட்க..
சரிங்க என்று என்று ஒரு மறுபேச்சும் பேசாமல் அவள் சென்றாள்..
போவதற்கு முன்.. நான் வீடு திரும்ப கொஞ்சம் லேட்டானாலும் ஆகுங்க.. நான் கிளம்புறதுக்கு முன்னால உங்களுக்கு ஒரு போன் பண்றேன்.. முடிஞ்சா வந்து பிக் அப் பண்ணக்கிறீங்களா என்று கேட்டாள்..
லேட்டாகுமா.. சரி சரி போன் பண்ணு நான் வர்றேன் என்று கூறி விட்டு நான் சென்று என் ரூமில் படுத்து தூங்கினேன்..
நன்றாக தூங்கி கொண்டிருந்த எனக்கு...
அப்பா அப்பா.. என்று என் மகன் என்னை தட்டி எழுப்பிய போது மணி சரியாக மாலை இரவு 7 இருக்கும்..
அம்மாகிட்ட இருந்து போன் என்று என்னிடம் கொடுத்தான்..
என்னங்க.. எவ்வளவு நேரம் போன் போட்றது.. எடுக்கவே மாட்றீங்க என்று கொஞ்சம் சலிப்பு கலந்து குரலில் சரஸ்வதி பேசினாள்..
சாரி சரஸ்வதி நான் கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்.. இதோ இப்பவே உடனே கிளம்பி வர்றேன்.. நீ அங்கேயே இரு... என்று அசடு வழிய சொல்ல..
சரி சரி நீங்க ஒன்னும் வர வேண்டாம்.. சிவகுமார் சாரே என்ன டிராப் பண்ணிட்றேன்னு சொல்லி அவர் கூட தான் இப்ப நான் கார்ல வந்துட்டு இருக்கேன்.. என்று சொல்லி போனை வைத்து விட்டாள்..
போனை வைத்த 15 நிமிடத்தில் எங்கள் வீட்டு வாசலில் கார் வந்து நின்றது..
சரஸ்வதி கொஞ்சம் கலைப்பாக தட்டு தள்ளாடி காரில் இருந்து இறங்கி வந்தாள்..
பை பை என்று சிவகுமார் அவளுக்கு டாட்டா காட்டி விட்டு காரை ஸ்டார்ட் பண்ணி சென்றார்..
வா சரஸ்வதி.. சிவகுமார் சாரை உள்ளே வர சொல்லி இருக்கலாம்ல.. அப்படியே அனுப்பிட்டியே.. என்று நான் வருத்தப்பட்டேன்..
இல்லங்க.. நான் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன்... அவர் கேக்கல.. என்று சொல்லி விட்டு ரொம்ப டயர்டா இருக்குங்க.. நான் போய் தூங்குறேன்.. டிஸ்ட்ரப் பண்ணாதீங்க என்று சொல்லி போய் பெட்டில் அப்படியே பொத் என்று குப்ப விழுந்து தூங்க ஆரம்பித்தாள்..
சரஸ்வதி பேச்சில் ஒரு குளறு தெரிந்தது.. வாயில் இருந்த சரக்கு ஸ்மெல் அடித்தது.. ஆனால் சரஸ்வதி தள்ளாடி வந்த போதே நான் சிவகுமார் வீட்டில் என்ன நடந்து இருக்கும் என்று யுகித்து விட்டேன்..
சரி தெளிந்து எழுந்திரிக்கட்டும் காலையில பேசிக்கலாம் என்று நான் விடியும் வரை காத்திருக்க ஆரம்பித்தேன்..
தொடரும்...
Comments
Post a Comment